Hot Posts

6/recent/ticker-posts

காதல் தொடர்புக்காக வீடுபுகுந்த இளைஞர் – தந்தையின் தாக்குதலில் உயிரிழப்பு!

மஹியங்கனை ரிதிமாலியத்த பிரதேசத்தில் இன்று அதிகாலை பரிதாபமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கிரிய மற்றும் யல்வல இடையிலுள்ள கிராமத்தில் உள்ள வீடொன்றில், கதவை உடைத்து நுழைந்த நபர் ஒருவரை வீட்டின் உரிமையாளர் உலக்கையால் தாக்கிய சம்பவம் நேர்ந்துள்ளது.

பொலிஸார் தெரிவித்ததாவது, தாக்குதலுக்குள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 28 வயதுடைய பெதியாகொட, மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய நபர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக இருப்பதாகவும், சம்பவ நேரத்தில் அவரது மனைவியும் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரின் மனைவி சிறிதளவு காயமடைந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 12.10 மணியளவில் இடம்பெற்றது. வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு நுழைந்த நபர் வீட்டில் இருந்தவரை தாக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர், உலக்கையை பயன்படுத்தி தற்காத்து தாக்கியதில், நுழைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

மேலும், மரணமடைந்த நபர் மற்றும் சந்தேக நபரின் மகளுக்கிடையில் ஏற்பட்டிருந்த காதல் தொடர்பே இச்சம்பவத்திற்கு வழிவகுத்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது சந்தேக நபர் ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவம் ஊரினை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment

0 Comments