வெலிபென்ன பகுதியில் 45 வயதுடைய பெண் ஒருவர் கடத்தப்பட்டு, முச்சக்கர வண்டி மற்றும் வீட்டிற்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கடந்த திங்கட்கிழமை இரவு கல்மட்டை பகுதியில் உள்ள 05வது போஸ்ட் சந்திப்பில் பேருந்தில் இருந்து இறங்கியதும், இனந்தெரியாத மூவர் முச்சக்கர வண்டிக்குள் இழுத்து, வண்டிக்குள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர், அவரை ஒரு வீட்டிற்குக் கொண்டு சென்றனர். அங்கு மேலும் இருவர், தொலைபேசி மூலம் அழைக்கப்பட்டு, மோட்டார் சைக்கிளில் வந்து, அவரையும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டுள்ளது. சந்தேகநபர்களில் நான்கு பேரை அவர் அடையாளம் கண்டதாகவும் கூறியுள்ளார்.
மீகம பகுதியைச் சேர்ந்த 19, 23, 24 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், வெலிபென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments