Hot Posts

6/recent/ticker-posts

யாழில் ஊதாரியான மனைவிக்கு அதிக கடன்!! விரக்தியில் கணவன் துாக்கில் தொங்கி மரணம்!

யாழில் ஊதாரியான மனைவிக்கு அதிக கடன்!! விரக்தியில் கணவன் பாலகிருஷ்ணன் துாக்கில் தொங்கி மரணம்!

இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த ம.பாலகிருஷ்ணன் (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். இதனை அவதானித்த அவரது உறவினர்கள் இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரினால் அவரது சடலமானது மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மனைவி அதிக கடன் பெற்றதன் காரணமாகவே குறித்த நபர் மனவிரக்தியில் உயிர்மாய்த்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Post a Comment

0 Comments