Hot Posts

6/recent/ticker-posts

யாழில் தங்குமிடத்தில் யுவதி குளிப்பதை வீடியோ எடுத்த நிர்வாகி கைது

யாழில் தங்குமிடத்தில் யுவதி குளிப்பதை வீடியோ எடுத்த நிர்வாகி கைது

யாழ்ப்பாணம் கோண்டாவில் அமைந்துள்ள தனியார் தங்குமிடமொன்றில், யுவதி ஒருவர் குளிக்கும்போது ரகசியமாக வீடியோ எடுத்த தங்குமிட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளான்.

வெளிமாவட்டத்தை சேர்ந்த குடும்பமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) அங்கு தங்கியிருந்தது. அந்த குடும்பத்தில் சேர்ந்த யுவதி ஒருவர் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த நேரம், குளியறையின் மேலே அமைந்துள்ள துவாரம் வழியாக நிர்வாகி தனது தொலைபேசியில் அந்த காட்சிகளை படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தை கவனித்த யுவதி, உடனடியாக தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், குறித்த நிர்வாகியை கைது செய்து, காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அவருடைய தொலைபேசிகள் சோதனைக்காக கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற அனுமதியுடன் அவற்றை பகுப்பாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபர் இதற்கு முன்னர் யாழ்ப்பாண நகரில் உள்ள பிரபல விடுதியில் பணியாற்றிய காலத்திலும், ரகசியமாக கேமரா பொருத்தி பெண்களை படமெடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் அந்த விடுதியை விட்டு விலகிய இவர், தற்போது கோண்டாவில் உள்ள தங்குமிடத்தை நிர்வகித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments