மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், T-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
கடை ஒன்றில் இருந்தவரை இலக்காக கொண்டு இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 37 வயதுடைய சசி குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸாரின் அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, சந்தேக நபர்கள் இருவரும் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்ட அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையில், அவர்கள் பொலிஸாரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து, அவர்களை நோக்கி சுட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின்போது ஏற்பட்ட நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், இருவரும் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவத்தின் பின்னணி மற்றும் சந்தேகநபர்களின் தொடர்புகள் குறித்து விரிவான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. பொலிஸாரின் விசாரணை அறிக்கைகள் வெளியாகும் பட்சத்தில் மேலதிக தகவல்களை வழங்குவோம்.
0 Comments